எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

210

பொகவந்தலாவை – பெட்றசோ டெவன் போல் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் இருந்து எரிந்து கருகிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தை தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டதாக குறித்த நபரின் மகனால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே பொலிஸார் நேற்று மாலை சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 70 வயதான சுப்பிரமணியம் மருதை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த குடும்பஸ்தருக்கு பிள்ளைகள் இருந்த போதும் கவனிப்பார் அற்ற நிலையில் அயலவர்கள் வழங்கிய உணவினை உண்டு தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சந்தேகம் நிகழ்வதால் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

அத்துடன் சடலம் இன்று ஹட்டன் நீதவானின் கண்காணிப்பின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் ஹட்டன் கைரேகை விசாரணை பிரிவு ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.