இலங்கையரான மருத்துவ மாணவி வல்லுறவு : பங்களாதேஷ் இளைஞன் கைது!!

211

பங்­க­ளாதேஷ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயிலும் மருத்­து­வ­பீட மாண­வி­யான இலங்கை யுவதி ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் பங்­க­ளாதேஷ் இளைஞர் ஒருவரை அந்­நாட்டுப் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

சித்­தகொங் விஞ்­ஞானம் மற்றும் தொழில்­நுட்ப பல்கலைக்கழகத்தில் மருத்­துவ பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்­டு­வந்த இலங்கை மாண­வியே கடந்த ஞாயி­றன்று வல்­லு­ற­வுக்­குட்­­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்­பாக 26 வய­தான எம்.டி. ஆரிவ் எனும் இளை­ஞனை பங்­க­ளாதேஷ் பொலிஸார் திங்­க­ளன்று கைது செய்துள்­ளனர். இவர் சித்­தாகொங் நகரில் விற்­பனைப் பிர­தி­நி­தி­யாக பணி­யாற்­று­பவர் என பொலிஸார் தெரி­வித்­துள்னர்.

சித்­தாகொங் நகரின் குல்ஷி பகு­தி­யி­லுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு தன்னை ஆரிவ் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கடந்த திங்­கட்­கி­ழமை மேற்­படி மாணவி குல்ஷி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார் என பங்­க­ளா­தேஷின் டெய்லி ஸ்டார் பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

தொலை­பேசி மூலம் மேற்­படி யுவ­தியும் ஆரிப்பும் அறி­மு­க­மா­ன­தா­கவும் ஜூன் 11 ஆம் திகதி முதல் இவர்கள் உரை­யாடி வந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி யுவ­தியை அவரின் விடு­திக்கு அரு­கி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு வரு­மாறு ஞாயிறு இரவு ஆரிவ் அழைத்தார். அந்த யுவதி ஹோட்­ட­லுக்குச் சென்­றபின், அங்கு வைத்து யுவ­தியை ஆரிவ் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆரிவ், சித்தாகொங் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது