50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டி விபத்து : நால்வர் படுகாயம்!!

268

 
லிந்துலையில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியதில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தலவாக்கலை – டயகம பிரதான வீதியில், லிந்துலை வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது படுங்காயங்களுக்குள்ளாகிய நால்வரும் சிகிச்சைகளுக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை பேர்ஹாம் தோட்ட பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்தததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன், விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.