கொழும்பில் தீப்பற்றி எரிந்த மூன்று வாகனங்கள்!!

249

கொழும்பின் தெமட்டகொட வீதியில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றில் திடீரென தீ பற்றிக் கொண்டமையினால் மேலும் பல வானகங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தீ பற்றிய மோட்டார் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொட பொலிஸ் பிரிவின் தெமட்டகொட வீதி, தூய அந்தோனியார் மாவத்தையிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீயினால் கார் மற்றும் வேன் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த நிலையில் தெமட்டகொட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.