17 வயதில் ஐ.நாவை திரும்பிப்பார்க்க வைத்த ஈழத்துச் சிறுவன்!!

260

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவரும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.