41 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்த பேருந்து!!

666

 
சென்னையில் ஓடும் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் அதில் இருந்த 41 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 41 பயணிகளுடன் சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது தீப்பிடித்தது.

இஞ்ஜினில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. அதைக் கவனித்த ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் பேருந்தை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக இறக்கிவிட்டுள்ளார். பயணிகள் தூரத்தில் சென்றதும் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எறிந்துள்ளது.

ஓட்டுநரின் சமயோஜித நடவடிக்கையால், 41 பேருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.