அனாதையாக இறந்து கிடந்த நடிகர் : அருகில் விளையாடிக்கொண்டிருந்த மகன்!!

840

திருச்சியில் நாடக நடிகர் இறந்தது கூட தெரியாமல் அவரது இரண்டு வயது மகன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்த சின்னகோப்பாநாயக்கர்( 50) என்பவர் நாடக நடிகராக இருந்துள்ளார்.

இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரகூரில் முதல் திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாயக்கர் வேறு பிரிவை சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூரை சேர்ந்த மற்றொரு பெண்ணை 2வது திருமணம் செய்துள்ளார்.

இதனால் நாயக்கரின் சொந்த கிராமத்தினர் நாயக்கரை தங்கள் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளனர்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நாயக்கருக்கு 2 வயதில் மகன் உள்ளான், இந்நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்னர் இரண்டாவது மனைவி இறந்துவிட்ட காரணத்தால், தனது இரண்டு வயது குழந்தையுடன் இவர் வசித்துள்ளார்.

இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை நாயக்கர் தனது வீட்டில் படுக்கையில் படுத்தபடியே இறந்துகிடந்துள்ளார்.

இதனை அறியாத மகன் தின்பண்டங்களை சாப்பிட்டபடி அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த அருகில் வசித்தவர்கள் கண்கலங்கியுள்ளனர்.

மேலும், வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட காரணத்தால் இவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர், இதனைத் தொடர்ந்து அனாதை பிணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் சிறுவன் தவசுமணியை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவனை திண்டுக்கல் சிறு குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர்.