பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அழகி மரணம்!!

585

மொடல் அழகிகள் தங்கள் துறையில் நிலைத்து நிற்பதற்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொள்கின்றனர்.

ஆனால், இதன் வாழ்நாட்கள் சிறிது காலம் தான், இதனால் ஆபத்துக்கள் ஏற்படும் என்று தெரிந்திருந்தும், இளமை இருக்கும் வரையில் சம்பாதித்துக்கொள்ளலாம் என்ற ஆசையில் அதிகப்படியாக அறுவை சிகிச்சைகளை செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

கனடாவில் உள்ள க்யூபெக் நகரை சேர்ந்த கிறிஸ்டினா மார்டெல்லி என்ற மொடல் அழகி, தனது அழகை அதிகரிப்பதற்காக 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்ய ஆரம்பித்தார்.

கிறிஸ்டினா 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தனது பொழுதுபோக்கு என்றவர் கிறிஸ்டினா. தன் உடல் வடிவத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என கூறினார்.

உதடு, முன்னழகு, பின்னழகை அறுவை சிகிச்சை செய்து பெரிதாக்கினார் கிறிஸ்டினா. மேலும், தன்னைப்போன்று மற்றவர்களும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், மீண்டும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையே அவரது உயிரை குடித்துவிட்டது.