வவுனியாவில் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

1153

 
த கொம்பாரிசன் எல் கே அமைப்பின் ஏற்பாட்டில் கூமாங்குளம் அஸ்திரம் நற்பணி மன்றத்தின் ஊடாக லண்டனைச் சேர்ந்த கோனேஸ்வரன் காவியாவின் எட்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு கூமாங்குளம் அந்தோனியார் முன்பள்ளி மற்றும் கூமாங்குளம் அம்பாள் முன்பள்ளியைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு நேற்று (21.06.2017) கூமாங்குளம் அந்தோனியார் ஆலயமுன்பள்ளியில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புத்தகப்பைகள், தண்ணீர்போத்தல்கள், சாப்பாட்டு கிண்ணிகள், கொம்பாஸ் உள்ளடங்கலான கற்றல் உபகரணங்கள் கொண்ட பொதி சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கூமாங்குளத்தைச் சேர்ந்த சரவணமுத்து, மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், முன்பள்ளிக் கட்டமைப்புத் தலைவரும் கொம்பாரிசன் அமைப்பைச் சேர்ந்த செயல்திட்ட அதிகாரி நா.ஸ்ரீதரன், அஸ்திரம் பொதுச் செயலாளர் நா.கிருஸ்ணமூர்த்தி மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அஸ்திரம் நற்பணி மன்ற இளைஞர்கள் சமூகத்திற்கு முன்னுதாரனமான பல பணிகளில் ஈடுபட்டு வருவது ஏனைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய நல்ல பண்பு என மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.