டெங்கு நுளம்பு பரவும் வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பு!!

466

டெங்கு நுளம்பின் பரவுகை ஆறு சதவீதத்ததால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பின் அடர்த்தி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஆறு சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பூச்சியியல் தொடர்பிலான ஆய்வுகளை நடத்திவரும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டெங்கு நோய்த்தொற்று அதிகரித்துவரும் மாவட்டங்களில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே, இவ்விடயம் தொடர்பில் கண்டறியப்பட்டதாக, மேற்படி சங்கத்தின் தலைவர் நஜின் சுமனசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் தொடர்பில் காணப்படும் இடர்பாடுகள் காரணமாக டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது