ஆபாச வார்த்தையால் ஏற்பட்ட விபரீதம் : கனடாவில் இலங்கையருக்கு ஆயுள் தண்டனை!!

309

கனடாவில் பக்கத்து வீட்டு நபரை கொலை செய்த இலங்கையருக்கு கனடிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் 10 வருட சிறைத்தண்டனையின் பின்னர் வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டு நபரான ஜெயராசன் மாணிக்கராஜா என்ற இலங்கையரை கொலை செய்தமை தொடர்பில் அமலன் தண்டபாணிதேசிகர் கடந்த மாதம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

2014ம் ஆண்டில் தண்டபாணிதேசிகரின் மனைவியை, பக்கத்து வீட்டுக்காரரான மாணிக்கராஜா கேலி செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்க சென்ற தண்டபாணிதேசிகரை, மாணிக்கராஜா ஆபாசமான வார்த்தைகளினால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தண்டபாணிதேசிகர், மாணிக்கராஜாவை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தண்டபாணிதேசிகருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் நீதிபதி தீர்மானித்த 10 வருட காலத்தின் பின்னர் பிணையில் வெளியில் செல்ல விண்ணப்பிப்பதற்கு தண்டபாணிதேசிகர் தகுதியுடையவராக காணப்பட்டுள்ளார்.

அதற்கமைய 13 வருடங்களின் பின்னர் தண்டபாணிதேசிகர் சிறையிலிருந்து விடுதலையாக விண்ணபிக்க முடியும். அவர் ஏற்கனவே மூன்று வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். எனவே 2027ஆம் ஆண்டு பிணைக்கு தகுதியுடையவராக இருப்பார் என கனேடிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

-தமிழ்வின்-