இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!!

397

கொட்டாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றின் மேல் மாடியில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடல் முழுவதும் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

26 வயதான தரிந்தி ஆலோக்கா என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். காதல் தொடர்பு காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை பாடசாலை சென்று வீடு திரும்பிய அவரது சகோதரியே முதல் முறையாக அவதானித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.