வவுனியாவில் மாணவர்களிடையே குழு மோதல் : இரு மாணவர்கள் படுகாயம்!!

841

வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்களும் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் இன்று (23.06.2017) இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் தனியார் கல்வி நிலையத்தில் குழுவினராக மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

கடந்த இரண்டு தினங்களாக குறித்த பாடசாலையில் மாணவர்கள் குழுவினராகப் பிரிந்து வகுப்பறையில் மோதிக்கொண்டனர். இதையடுத்து இன்று இரவு 7.30 மணியளவில் வைரவப்புளிங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் ஒன்றிணைந்த மாணவர்கள் அதே பாடசாலையில் க.பொ.த சதாரணத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டு மாணவர்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைரவப்புளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாக காணப்படுகின்ற அதேவேளை மாணவர்கள் குழுவினராக மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

இப்பகுதியில் பொலிசாரரை கடமையில் நிறுத்துவதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.