கொரிய பிராந்தியத்தில் அசாதாரண நிலை : அமெரிக்காவை அழிக்க மிகப்பெரிய ஆயுதம் சோதனை!!

565

அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் வகையில் வடகொரியா புதிய ரொக்கெட் என்ஜின் ஒன்றை பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த என்ஜின் சோதனை, அமெரிக்காவை நோக்கி செலுத்தப்படவுள்ள ஏவுகணைகளில் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென் பகுதியை தாக்கி அழிக்கும் நோக்கில் உருவாக்குகின்ற ஒரு முயற்சியாக இந்த சோதனை நடவடிக்கை இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையானது அமெரிக்காவை தாக்கக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பின் ஒரு நிலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியா ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தென்கொரியா அமெரிக்காவின் இராணுவ படைப்பிரிவுகளின் வலுவைப்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கொரியா பிராந்தியத்தில் பதற்றத்தை தடுக்க விரும்பினால் இராஜீய ரீதியில் அதிக அழுத்தங்களை சீனா பயன்படுத்த வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் ஒரு சோதனை மேற்கொண்டுள்ளது.