இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கிண்ணத்தை வெல்ல முடியாமல் இலங்கை அணி தோற்று வெளியேறியது. இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 15 மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக போர்ட் இருந்து வருகிறார்.
தென் ஆபிரிக்காவை சேர்ந்தவரான போர்டின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி அவுஸ்ரேலியாவை 3-0 என படுதோல்வி அடையச் செய்தது.
ஆனால், பின்னர் தொடர்ந்து தோல்விகளையே இலங்கை அணி சந்தித்து வருகிறது. 2016ம் ஆண்டுக்கான ஐசிசியின் டி20 உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.
மேலும், வங்கதேச அணியுடன் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், வரும் 30ஆம் திகதி சிம்பாவே அணியுடன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் பதவியை பீல்டிங் பயிற்சியாளர் நிக் போதாஸ் ஏற்கவுள்ளார்.