கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம் : பல கோடி பணப் பரிசு!!

274

 
கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண் முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற தமிழ் பெண்ணே பரிசு தொகையை பிறந்த நாள் பரிசாக வென்றுள்ளார்.

வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 1,000 டொலர் அல்லது 675,000 டொலராக மொத்த தொகையை பெற்றுக் கொள்வதா என்பதை பாலகௌரியே தீர்மானிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கிட்டு பார்த்தால் 1000 டொலர் என்ற ரீதியில் 13 வருடங்களுக்கு அந்த பணம் செலுத்த நேரிடம். இதனால் தடவையில் முறையில் 675,000 டொலர் பணம் பாலகௌரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கனேடி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.