கதிர்காமம் ஆலய வளாகத்தில் வைத்து காணாமல் போன 3 வயதுடைய குழந்தையை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி காணாமல் போன நெதுமி அனுஷ்கா என்ற குழந்தையை இன்று (24) பொலிஸார் மீட்டுள்ளனர்.
கதிர்காமம் ஆலய பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.