அதிகாலையில் கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி!!

269

ஹம்பாந்தோட்டையில் முச்சக்கர வண்டி ஒன்றும்டிப்பர் வண்டி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை ஹூங்கம – லுணம பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 40, 34 மற்றும் 19 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்குள் தந்தை மற்றும் அவரது மகன் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பு – கதிர்காமம் வீதியின் தங்காலை நோக்கி பயணித்த டிப்பர் வண்டி மற்றும் கதிர்காமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் 5 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் இருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.