ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!!

303

எதிர்வரும் நாட்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான யோசனையை போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உதவி வணிக கண்காணிப்பாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

இறுதியாக ரயில் கட்டண திருத்தம் 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை பல முறை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் ரயில்வே திணைக்களம் நட்டத்தில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படும் பஸ் கட்டணத்திற்கு சமமான அளவு ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.