வவுனியாவில் மண்சரிவுப் பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வாழும் குடும்பத்திற்கு உதவி!!

316

 
கண்டி கொத்மலைப்பிரதேசத்தில் வாழ்ந்தபோது இடம்பெற்ற மண்சரிவால் தமது உறவுகளை இழந்து பின்னர் வவுனியா கற்குளம் பகுதியில் வவுனியா பிரதேச செயலகம் மூலம் வழங்கிய காணியில் குடியேறி வாழும் வறிய குடும்பத்திற்கு இன்று(25.06) மாவட்ட சமூக சேவை அலுவலகம் மூலம் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

லண்டன் V3 என்ற அமைப்பின் ஊடாக இன்று தனது 83வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற இலங்கை வங்கி வட பிராந்திய முகாமையாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்களின் மகன் லண்டன் வாழ் சமூக ஆர்வலர் பொ.மோகனரூபன் கற்குளத்தில் இருந்து தினமும் நீண்ட தூரம் சென்று கூலித்தொழில் செய்து வரும் குப்புசாமி பாலசுப்ரமணியம் என்பவருக்கு அவரது வேலைகளை இலகுவாக மேற்கொள்ள துவிச்சக்கர வண்டி வழங்கி உதவியுள்ளனர்
.
கண்பார்வை குறைபாடான மனைவி , மூன்று கல்வி கற்கும் ஆண் பிள்ளைகளுடன் ஒரு காட்டுப்பிரதேசத்தில் வசித்து வரும் இவரது குடும்பம் அன்றாடம் உழைத்தே சீவித்து வருகின்றது.

இவர்களது நிலைமையை கிராம சேவையாளர் திரு.கஜந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.லோகேஸ்வரன் குறித்த பிரதேச கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உறுதி செய்ததற்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து இந்த உதவி வழங்கப்பட்டது.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன், தாய்மார்கள் சங்கச்செயலாளர் திருமதி ரட்ணமாலா, கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் செ.குகனேசன், செயலாளர் ஆர்.சுஜீபன், உறுப்பினர் பகீரதன் மற்றும் இந்த குடும்பத்தில் அக்கறை கொண்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.