விடியும் வரை பல்கனியில் பதுங்கியிருந்த காதலன் : காதலி கொடூரமாக படுகொலை!!

276

 
கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம பதில் நீதவான் பிரியங்கா மந்துமஹேவா பட்டபெதிகே முன்னால் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் கொலை செய்வதற்கு முதல் நாளான கடந்த 21ஆம் திகதி வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து மூன்றாம் மாடி பால்கனியில் விடியும் வரை ஒழிந்திருந்துள்ளார். பின்னர் தரிந்தியின் தாய் மற்றும் தந்தை கொட்டாவ ஹொரனை வீதியில் அமைந்துள்ள அவர்களின் கடைக்கு செல்லும் வரை காத்திருந்திருந்து இந்த கொலை செய்துள்ளார் என விசாரணகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொலையாளி தொடர்பில் பல்வேறு சாட்சிகள் CCTV காணொளியின் ஊடாக வெளியாகியுள்ள நிலையில், குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து, சந்தேக நபர் சட்டதரணிகள் ஊடாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு குறித்த கொலை தொடர்பில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

“எனக்கும் தரணிக்கும் இடையில் இரண்டு வருட காதல் தொடர்பு காணப்பட்டது. இருவரின் சம்மதத்திற்கு மத்தியில் சில காலங்களுக்கு முன்னர் இந்த தொடர்பு நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் தான் மாத்தறை ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த வேறு பெண்ணை காதலித்தேன். எனினும் அந்த பெண்ணுக்கு தரணி தொடர்ந்து தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக தனது இரண்டாவது காதல் தொடர்பும் முறிந்து விட்டது. அந்த கோபத்தினால் நான் அவரை கொலை செய்து விட்டேன்”.. என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக 29 வயதான தரிந்தி ஆலோக்கா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் உடலில் 20 கத்திக் குத்துக்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.