கதிர்காமத்தில் யாசகம் செய்த 48 சிறுவர் சிறுமியர் கைது!!

878

கதிர்காமம் புண்ணிய பூமியில் யாசகம் செய்த 48 சிறுவர் சிறுமியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று நாள் தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் இவ்வாறு சிறுவர் சிறுமியர் யாசகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

யாசகத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர் சிறுமியரை ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

பெற்றோருடன் இணைந்து சிலர் யாசகத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் ஐந்து பொலிஸ் குழுக்களின் உதவியுடன் சிறுவர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் சிறுவர் சிறுமியரை கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் யாசகத்தில் ஈடுபட்டு வந்தனர் எனவும், அதிகாரிகள் சுற்றி வளைப்பு மேற்கொள்வதனை அறிந்து கொண்ட சிறுவர் சிறுமியர் தப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.