நாடு திரும்ப உதவி கோரும் ஸ்கொட்லாந்து பெண்!!

226

இலங்கையில் கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில், தான் நாடு திரும்ப உதவுமாறு ஸ்கொட்லாந்து பிரஜையான பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

டயனி டி சொய்சா என்ற இந்த பெண்ணின் கணவரான 26 வயதான பிரியஞ்ஜன டி சொய்சா கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த பெண் கடந்த வருடம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்து விட்டு இலங்கையில் தனது கணவருடன் குடியேறியுள்ளார்.

அனைத்தையும் கைவிட்டு இலங்கையில் வந்து குடியேறியதாகவும் தற்போது சகலமும் துயரமாக முடிந்து விட்டதாகவும் டயனி கூறியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்த டயனி, தான் தங்கியிருந்த ஹொட்டலில் பணி புரிந்த பிரியஞ்ஜனவை சந்தித்துள்ளார்.

இருவரும் தமது தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டதுடன் ஸ்கொட்லாந்து திரும்பிய டயனி இணையத்தளம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து ஏழு மாதங்களுக்கு பின்னர் டயனி, விடுமுறையில் இலங்கை சென்றிருந்ததுடன் கடந்த 2012 ம் ஆண்டு பிரியஞ்ஜனவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

டயனி, அஹூங்கல்லை நகரில் உள்ள கணவனின் நகருக்கு பல முறை சென்றுள்ளார்.

கணவனின் குடும்பம் வறிய குடும்பம் என்பதால், ஸ்கொட்லாந்தில் உள்ள தனது வீட்டை விற்று இலங்கையில் வீடு ஒன்றை கட்டியதுடன் கணவனுக்கு தொழில் செய்ய மினி பஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 30ம் திகதி நண்பர்கள் வீட்டில் இருந்த போது தனது கணவன் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் கணவரிடம் கப்பம் கேட்டு சிலர் மிரட்டி வந்துள்ளதாகவும் டயனி கூறியுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு இரண்டாவது மனைவி இருப்பதாக டயனி சந்தேகம் கொண்டுள்ளார்.

வீட்டில் திருமண பதிவு பத்திரம் ஒன்றை பார்த்ததாகவும் அது திருமணம் பத்திரம் தனது கணவருடையதாக இருக்க வேண்டும் அதில் திருமணப் பெண்ணின் வயது 18 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு பிரியஞ்ஜனவுக்கும் தனக்கும் இடையில் 33 வருட வயது வித்தியாசம் எனவும் டயனி குறிப்பிட்டுள்ளார்.

கணவனின் மரணத்தின் போதே தான் அவரை மிகவும் வயதானவர் என்பது தனக்கு தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

கணவன் இறந்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள வீட்டை விற்பனை செய்து விட்டு, ஸ்கொட்லாந்து சென்று தனது வாழ்க்கை மீள கட்டியெழுப்புவதற்காக சட்டத்தரணி ஒருவரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் இது சம்பந்தமாக பிரித்தானிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் டயனி குறிப்பிட்டுள்ளார்.