மாத்தறை – கம்புறுபிடிய பகுதி வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எரிகாயங்களுடன் மூன்று சிறுவர்களின் சடலமும், அவர்களது தந்தை எனக் கருதப்படும் நபரின் சடலம் தூக்கில் தொங்கி பலியான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனது 16, 14 மற்றும் 10 வயதான பிள்ளைகளுக்கு தீ வைத்த 44 வயதான குறித்த நபர், பின்னர் தூக்கி தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
மாத்தறையில் இரண்டு பெண் சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சடலங்களாக மீட்கப்பட்ட சிறார்களின் தாய் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குடும்பத் தகராறொன்றின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






