டெங்கு உயிரிழப்புக்களுக்கு குப்பைகளே காரணம்!!

286

கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிகரித்து வரும் குப்பைகள் தான் காரணம் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த ஏப்ரலில் கொழும்பில் குப்பை மேடு சரிந்ததில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து, நகரில் குப்பைகளை அள்ளும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. தெருக்களில் தேங்கும் அழுகிப்போன குப்பைகள் அதிகரித்து வருவதால் கொசுக்களின் இனப்பெருக்கும் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

-பிபிசி-