வதந்திகள் தொடர்பில் மஹேல பதில்!!

634

இந்திய அணியின் முழுநேர பயிற்றுவிப்பாளராக எதிர்பார்க்கவில்லை என, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவி மஹெலவுக்கு வழங்கப்படவுள்ளதாக, அண்மையில் செய்திகள் வௌியாகின. இந்தநிலையில், இதனை மறுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், தான் தற்போது இந்தியன் பிரிமியர் லீக் போட்டி அணியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் அணியான குல்னா டய்டன்ஸ் ஆகியவற்றின் பயிற்சியாளராக தொடர்ந்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.