திருகோணமலையில் காட்டு யானை தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!!

253

திருகோணமலை கோபாலபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த சிறுவன் தனது தந்தையுடன் மாடு மேய்க்கும் வாடியில் இருந்தபோது, நிலாவெளி 10 ஆம் கட்டை பகுதியில் யானை தாக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தாக பொலிஸார் கூறினர்.

சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட வேளையில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.