முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் பெண் ஒருவரை கூட்டாக வன்புணர்ந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு தலா எட்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.டெப் தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர்நாள் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாது வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எட்டு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தலா ஐயாயிரம் ரூபாய் அபராதமாகச் செலுத்துவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒருவர் 25 ஆயிரம் ரூபா வீதம் நஷ்டயீடாக வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்காவிட்டால் மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.