பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய இருவருக்கு எட்டு வருட கடூழிய சிறைத்தண்டனை!!

236

முந்தல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மறிச்­சுக்­கட்டி பிர­தே­சத்தில் பெண் ஒரு­வரை கூட்­டாக வன்புணர்ந்த சம்­ப­வத்தில் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்ட இரு­வ­ருக்கு தலா எட்டு வரு­டங்கள் கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி ஏ.டி.டெப் தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓர்நாள் இடம்­பெற்­றுள்ள இச்­சம்­ப­வத்­துடன் தொடர்புடைய மற்­றொ­ருவர் வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு ஆஜ­ரா­காது வெளி­நாடு ஒன்­றுக்கு தப்பிச் சென்­றுள்ள நிலையில் அவ­ருக்கு திறந்த பிடி­யா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எட்டு வருட சிறைத் தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ள­தோடு அவர்கள் தலா ஐயா­யிரம் ரூபாய் அப­ரா­த­மாகச் செலுத்­து­வ­தற்கும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு ஒருவர் 25 ஆயிரம் ரூபா வீதம் நஷ்­ட­யீ­டாக வழங்க வேண்டும் என்றும் அவ்­வாறு வழங்­கா­விட்டால் மேலும் இரண்டு வரு­டங்கள் சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க நேரிடும் என்றும் நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார்.

முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட அதே பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.