மதுவுக்கு பணம் கேட்டு தாயை கொடூரமாக தாக்கிய மகன்!!

240

மது அருந்துவதற்கு பணம் கொடுக்கவில்லை என தாயை மிகக் கொடூரமாக தாக்கிய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரகஸமங்ஹந்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மது அருந்துவதற்கு பணம் வழங்கவில்லை என ஆத்திரமுற்ற மகன் தாயை கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை எதிர்வரும் 5ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு அல்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயின் ஆடையில் மறைத்து வைத்திருந்த பணத்தைத் தருமாறு கோரி தாக்குதல் நடத்தியுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் குறித்த நபரின் வீடு சென்றிருந்த போதும், குறித்த நபர் வீட்டின் பின் புறத்தில் மது அருந்திக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

ஊரகஸ்மங்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கால்களிலும், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான தாய், நோயாளர் காவு வண்டி ஒன்றின் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.