கூகிள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி : 645 கோடி பறிபோகுமா?

586

பிரபல தேடல் பொறியான கூகிள் நிறுவனத்திற்கு 645 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இணைய விற்பனை துறையில் முறையற்ற வகையில் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

இணைய பயனாளர்கள் என்ன விதமான தேடல்களை மேற்கொள்கின்றார்கள் என்பதை கட்டுப்படுத்தும் அதிகாரம் மறைமுகமாக கூகுள் நிறுவனத்திடம் உள்ளது.

இந்நிலையில் இணைய விற்பனைத் துறையிலும் கூகிள் நிறுவனம் கால் பதித்துள்ளது. இதனை கருத்திற் கொண்டு பிற இணைய விற்பனை நிறுவனங்கள் தொடர்பான தேடல்களை கூகிள் நிறுவனம் தடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 90 சதவீதமான இணைய தேடுதல்கள் கூகிள் வழியாகத்தான் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கூகிள் நிறுவனத்தின் செயற்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வியாபார போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இணைய விற்பனை துறையில் தாங்கள் கால் பதிப்பது சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லது என கூகிள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து வந்த கூகிள் நிறுவனத்தின் மீதான வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி இணைய விற்பனை துறையில் ஏகபோக அதிகாரத்தை செலுத்த முனைந்த குற்றத்திற்காக 645 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தனது சேவையை பிரதானப்படுத்தும் நோக்கத்துடன், இதர சேவை நிறுவனங்கள் பற்றிய தகவல்களை தேடுதலில் காட்டாமல் தடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படும் என்று தெரிகிறது.