இறக்கும் தறுவாயில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தாயின் சோகம்!!

647

பிறந்து 32 நாட்களில் உயிரிழந்த குழந்தை, அசைவுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Catherine Hughes என்பவருக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Riley என பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறந்தவுடனேயே கிருமி தொற்று நோய் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொடர்ந்து இருமல் வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள இயந்திரம் ஒன்றின் ஊடாக குழந்தையை மருத்துவர்கள் பராமரித்து வந்துள்ளனர்.

ஆனாலும் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தனது குழந்தை கை, கால்களை அசைக்கும் நிலையில் Catherine புகைப்படங்களை எடுத்துள்ளார்.

பின்னர், பிறந்து 32 நாட்களில் குழந்தை உயிரிழந்துள்ளது. Catherine கர்ப்பமாக இருந்த போதே சரியான அளவில் தடுப்பூசிகளை போட்டு கொண்டிருந்தால் குழந்தையால் நோயை எதிர்த்து போராடியிருக்க முடியும் என பின்னர் மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்நிலையில் தான் எடுத்த புகைப்படங்களை Catherine பேஸ்புக்கில் கனத்த மனதுடன் பதிவேற்றியுள்ளார்.

Catherine கூறுகையில், என் குழந்தை இறந்து விடுவான் என மருத்துவர் என்னிடம் கூறும் போது என் இதயமே உறைந்து போனது போல இருந்தது. சரியான அளவில் தடுப்பூசி போட்டு வந்ததாக தான் நினைத்ததாக கூறியுள்ளார்.

மேலும், என் குழந்தையை தாக்கிய கண்ணுக்கு தெரியாத கிருமி மீது எனக்கு கோபம் வருகிறது. அது தான் என் குழந்தையின் உடலை சீரழித்து விட்டது.

தன் குழந்தையை வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாமல் போனதை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது என கூறிய Catherine, தன் குழந்தையின் அழகான நீல நிற கண்களை இனி பார்க்கவே முடியாது என்பது வருத்தமாக உள்ளதாக கூறியுள்ளார்.