வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் சிக்கி 1261 பேர் உயிரிழப்பு!!

465

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1261 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கியே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேகம் மற்றும் போதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கள் சம்பவித்தமைக்கான பிரதான காரணம் என வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான பாதுகாப்பு சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் விபத்துக்களின் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக முச்சக்கரவண்டி ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களுக்கு மூன்று நாள் செயலமர்வை அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.