இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டே சைக்கிள் ஒன்றினை பரிசளித்துள்ளார்.
நரேந்திர மோடிக்கும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டேவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த சுவாரசியமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அத்துடன், பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்தே நெதர்லாந்து பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு சைக்கிள் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும், இந்த சைக்கிளினை பிரதமர் மோடி ஓட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






