118 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம் : 77 பேர் மீண்டும் கைது!!

254

2016 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து மொத்தமாக 118 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது,

வெலிக்கடையிலிருந்து 27 பேரும், வெளியிடங்களில் சிரமதானம் மற்றும் ஏனைய வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தபோது 43 பேரும், சிறைச்சாலை சுவர்களுக்கு மேலாக தாண்டிக் குதித்து 13 பேரும், வைத்தியசாலைகளிலிருந்து இரண்டு பேரும் நீதிமன்றங்களிலிருந்து இருவரும், முகாம்களில் பணியாற்றியபோது 31 பேரும் தப்பியுள்ளனர்.

தப்பியோடியவர்களில் 77 பேர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதிலும் உள்ள சிறைகளில் மொத்தமாக 1,18,935 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2016 இல் சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்டுள்ள ஹெரோயின், கொக்கெய்ன் போன்ற போதைவஸ்துகளும் ஏனைய பொருட்களும் சிறையதிகாரிகள் மேற்கொண்ட 117 சோதனைகளின் போது பிடிபட்டன என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.