ரயிலில் மோதி ஒருவர் பலி!!

273

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என காலி துறைமுக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர் காலி, கொடுகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.