கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்படுவாரா?

658

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் நாடு கடத்தலை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின் போது தான் நாடு கடத்தலை விரும்புவதாக சிவலோகநாதன் தனபாலசிங்கம் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் Quebec Crown வழக்கறிஞர்கள், சிவலோகநாதனின் நாடு கடத்தலை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் தனபாலசிங்கம் தாமாகவே நாடு கடத்தலை ஏற்று கொண்டார்.

தனபாலசிங்கம் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி Alexandre Boucher தீர்மானித்தார்.

கடுமையான குற்றச்சாட்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் 30 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-