யூடியுப் சாகசத்திற்காக காதலனை சுட்டுக் கொன்ற பெண்!!

759

சமூக வலைத்தளத்தில் அதிக ரசிகர்களைப் பெறுவதற்காக பெண் ஒருவர், தனது ஆண் நண்பரை விளையாட்டாக சுட முயன்று அது விபரீதமாக முடிந்துள்ளது.

அமெரிக்காவின் மின்னெசோட்டாவைச் சேர்ந்த மோனாலிஸா பெரெஸ் என்ற 19 வயதுப் பெண், அவரது ஆண் நண்பரான பெட்ரோ ரூயிஸ் என்பவரை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

சமூக ஊடகம் ஒன்றுக்காக செய்யப்பட்ட நிகழ்வு தவறாகப் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோ ரூயிஸ் தனது மார்பை புத்தகம் ஒன்றை வைத்து மறைத்துக்கொள்ள, அவர் மீது சுட்டால், குண்டு புத்தகத்தைத் தாண்டித் துளைக்காது என்று தவறாக அவர்கள் எண்ணியிருந்தனராம்.

இந்த நிகழ்வை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது.

பெட்ரோ ரூயிஸின் மார்பில் மோனாலிஸா துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொன்ற அந்த தருணத்தை அவர்களது 3 வயது குழந்தையும், சுமார் 30 பார்வையாளர்களும் நேரில் கண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் தங்களைப் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இதில் ஈடுபட்டதாக ரூயிஸின் உறவினர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் மோனாலிஸா பெரெஸ் தற்போது இரண்டாம் நிலை திட்டமிடாத ஆட்கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். எதிர்வரும் புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்காக முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.

இந்த நிகழ்வு ரூயிஸின் யோசனை என்றும், இதனை செய்ய ரூயிஸ் தன்னை இணங்க வைத்தார் என்றும் மோனாலிஸா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பு சமூக ஊடகமான ட்விட்டரில் தான் எடுக்கப்போகும் இந்த முயற்சி பற்றி மோனாலிஸா வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.