அனைத்துக்கும் நான் : நான் இல்லாத இடமில்லை!!

212

சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மீது குற்றம்சுமத்துவதற்கு சிலர் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலி பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தாம் நேற்று செய்திகளை அவதானித்துக் கொண்டிருந்த போது குப்பை மேட்டு சரிவுக்கு தாமே காரணம் என கூறப்பட்டதாகவும், சயிட்டம் பிரச்சினைக்கும் தாமே காரண கர்த்தா எனவும் குற்றம்சுமத்தப்பட்டதாக தெரிவித்தார்.

உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தாமே பொறுப்பு எனவும் கூறப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை அவதானிக்கும் போது தாம் இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினதும், சிறிலங்கா சுதந்திர கட்சியினதும் பந்தம் தற்போது வலுவிலந்து விட்டது. இந்த இயலா நிலைமையை தம்மீது சுமத்துவதாக அவர் தெரிவித்தார்.