பஸ் விபத்தில் ஐவர் காயம்!!

267

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை கந்தேகெதர பிரதான வீதியில் தியனாகொட ஆலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று (30) மதியம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 5 பேர் படுகாயமடைந்து பதுளை மற்றும் கந்தேகெதர ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.