குப்­பை­களை வீதி­களில் வீசி விட்டுச் செல்­வோரை கண்­கா­ணித்து கைது செய்ய சீ.சீ.ரீ.வி. கம­ராக்கள்!!

304

கொழும்பு நகர் உட்­பட மேல்­மா­கா­ணத்தில் ஆங்­காங்கே குப்­பை­களை வீதி­களில் போட்டுச் செல்லும் நபர்­களை சீ.சீ.ரீ.வி. கெம­ராக்­களில் கண்­கா­ணித்து கைது செய்ய பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார்.

தற்­போதும் கடந்த சில நாட்­க­ளுக்குள்ளும் கொழும்பு நகர் உட்­பட மேல்­மா­கா­ணத்தில் ஆங்­காங்கே குப்­பை­களை போட்ட 600 பேரை கைது செய்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பு வடக்கு, மத்­திய கொழும்பு, கொழும்பு தெற்கு, நுகே­கொடை, கல்­கிஸை, கம்­பஹா, கள­னிய, நீர்­கொ­ழும்பு, களுத்­துறை பாணந்­துறை ஆகிய பொலிஸ் பிரி­வு­க­ளி­லேயே இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

ஆங்­காங்கே குப்­பை­களை கொட்டும் நபர்கள் குறித்தும் குப்­பை­களை வீதி­களில் எறிந்து விட்டு தப்பிச் செல்லும் வாக­னங்­கள் குறித்தும் அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு அறிவிக்கும்படியும் பொலிஸ் பேச்சாளர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.