கொழும்பு நகர் உட்பட மேல்மாகாணத்தில் ஆங்காங்கே குப்பைகளை வீதிகளில் போட்டுச் செல்லும் நபர்களை சீ.சீ.ரீ.வி. கெமராக்களில் கண்காணித்து கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதும் கடந்த சில நாட்களுக்குள்ளும் கொழும்பு நகர் உட்பட மேல்மாகாணத்தில் ஆங்காங்கே குப்பைகளை போட்ட 600 பேரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு வடக்கு, மத்திய கொழும்பு, கொழும்பு தெற்கு, நுகேகொடை, கல்கிஸை, கம்பஹா, களனிய, நீர்கொழும்பு, களுத்துறை பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆங்காங்கே குப்பைகளை கொட்டும் நபர்கள் குறித்தும் குப்பைகளை வீதிகளில் எறிந்து விட்டு தப்பிச் செல்லும் வாகனங்கள் குறித்தும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கும்படியும் பொலிஸ் பேச்சாளர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.