கிணற்றில் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு!!

525

கலேவெல – கொஸ்கஹஹின்ன பிரதேசத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் தரம் 3 இல் கல்வி பயிலும் கொஸ்கஹஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) வீட்டின் பின்புறமுள்ள வயல் நிலத்தில் பட்டம் விட சென்றிருந்த வேளையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிணற்றில் வீழ்ந்த மாணவர் பிரதேச வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு, கலேவெல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.