மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட நடிகர் கைது!!

737

மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக நடிகர் சிவமணியை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவரிடம் இருந்து லொறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை நடப்பதாகவும், அதில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் மாவட்ட காவல் துறை அதிகாரி விஜயகுமார் எச்சரித்திருந்தார்.

மணல் கொள்ளை குறித்து அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், விசாரணை நடத்திய பொலிசார் இதில் ஈடுபட்ட ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவமணி என்பவரை கைது செய்துள்ளனர்.

சிவமணி, மணல் கொள்ளையில் சம்பாதித்த பணத்தை வைத்து திட்டமிட்டபடி என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை தயாரித்து, அதில் தானே கதாநாயகனாக நடித்து வந்தராம்.

திட்டமிட்டபடி திரைப்படத்தில் மேகா ரத்னாகரன் என்பவர் கதாநாயகியாக நடித்தார் எனவும் தெரிகிறது.