பொது இடத்தில் சிறுநீர் கழித்த அமைச்சர் : வைரலாகும் புகைப்படம்!!

289

தூய்மை இந்தியா என மத்திய அரசு ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க மத்திய அமைச்சர் ஒருவரே பொது இடத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இவர் பீகார் மாநிலம் மோதிஹரி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு காரில் இருந்து இறங்கி பொது இடத்தில் உள்ள சுவரில் சிறுநீர் கழித்துள்ளார்.

ராதாமோகன் சிறுநீர் கழிக்கும் போது பொலிசாரும் பாதுகாப்பில் இருந்துள்ளனர். அவர் இவ்வாறு செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

தூய்மை இந்தியா பேசும் அரசின் அமைச்சரே இவ்வாறு செய்வதா? என்று இணையதள பயன்பாட்டாளர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.