அனுஷ்காவுக்காக தயாரான அந்தப்புரம்!!

515

Anuska

நடிகை அனுஷ்கா தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் பாஹுபலி, குணசேகர் இயக்கும் ராணி ருத்ரம்மா தேவி என 2 சரித்திர படங்களில் நடித்து வருகிறார். 3Dல் உருவாகும் ராணி ருத்ரம்மா தேவி படத்தின் 4வது கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரண்மனை அந்தப்புர அரங்கு அமைத்திருக்கிறார்களாம். இந்த அரங்கில் அனுஷ்கா ஏராளமான நகைகள் அணிந்து ராணி வேடத்தில் ஆடும் நடனம் படமாக்கப்பட உள்ளது. இந்த அரங்கை தோட்டாதரணி அமைத்திருக்கிறார்.

இளையராஜா இசையில் அமைந்திருக்கும் இந்த பாடலை சீதாராம சாஸ்திரி எழுதி உள்ளார். அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்த பாடலை படமாக்குகின்றனர். ராஜு சுந்தரம் நடனம் அமைக்கிறார்.

அனுஷ்கா நடிக்கும் இந்த 2 தெலுங்கு படங்களும் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.