சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

239

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுமியொருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அழைத்துச் சென்று வைத்திருந்த இளைஞரை, எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று (01) உத்தரவிட்டார்.

புன்னையடி- ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்கும் சிறுமியும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகவும் சிறுமியை, யாருக்கும் தெரியாமல் வாகரை பகுதிக்கு அழைத்துச் சென்று இளைஞரின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில், சிறுமியின் பெற்றோர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, இளைஞரை நேற்று முன்தினம் (30) இரவு பொலிஸார் கைது செய்துள்ளார்.