மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி மரணம்!!

230

டெங்கு தொற்றினால் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் டெங்கு தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதனால் பல்கலைக்கழகத்தின் கற்கை நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் நுளம்புகள் பரவுவதனை தடுப்பதற்காக தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதி குறித்து திருப்தியடைய முடியாதென பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்கள் கற்கை நடவடிக்கைகள் மாத்திரமே பிற்போடப்பட்டுள்ளதாகவும், ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.