சீகிரியாவில் வீழ்ந்து உயிரிழந்த யாழ். நபரின் தகவல்கள் வெளியீடு!!

742

 
யாழ்ப்பாணத்திலிருந்து சீகிரியாவிற்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

யாழ். ஊர்காவற்துறை, வேலணை பிரதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான பாலசுப்ரமணியம் மதியழகன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 3 மணியளவில் சீகிரியாவை பார்வையிட்டு திரும்பி வரும் போது விழுந்து உயிரிழந்துள்ளார்.

தனது பிள்ளைகளின் பாடசாலை நண்பர்களுடன் சீகிரியாவை பார்வையிட குறித்த நபர் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பி வரும் போதே இவ்வாறு கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்தவரை சீகிரியா பாதுகாப்பு பிரிவினர் அங்குள்ள கிராம வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதனையிட்ட பின்னர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.