மனைவியின் காதலனை 30 முறை கத்தியால் குத்திய கணவன்!!

1012

டெல்லியில் தனது மனைவியின் காதலனை கணவர் 30 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

வினோத் என்பவரது மனைவிக்கும் அருகில் வசிக்கும் ஷானு (21) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஷானுவை கொலை செய்ய திட்டமிட்ட வினோத், தனது மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு அவரது நம்பரில் இருந்து ஷானுக்கு போன் செய்துள்ளார்.

போன் மட்டும் செய்துவிட்டு எதுவும் பேசமால் இணைப்பை துண்டித்துள்ளார். வினோத்தின் மனைவி தான் போன் செய்துள்ளார் என நம்பி ஷான், வினோத்தின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஷானை 30 முறை மாறி மாறி குத்தியுள்ளார் வினோத்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷானை வினோத்தின் தாயார் அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, தலைமறைவாகியுள்ள வினோத்தை பொலிசார் தேடி வருகின்றனர்.