மகள் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த தந்தை!!

286

மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60) இவரின் மகள் மஞ்சுளா (26). இவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

இதையடுத்து தனது தந்தை வீட்டில் மன அழுத்தத்துடன் மஞ்சுளா இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மஞ்சுளாவுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதையடுத்து அவரை முத்துகிருஷ்ணன் மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். பின்னர், வீட்டுக்கு வந்த மஞ்சுளா தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டுள்ளார்.

அவர் கதவை திறக்க மறுத்த நிலையில், குடும்பத்தார் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் மஞ்சுளா சடலமாக தொங்கியுள்ளார். மகள் இறந்ததை அறிந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியில் சென்றுள்ளார்.

பிறகு, மஞ்சுளா மரணம் குறித்து காவல் நிலையத்தில் பேச சென்றிந்த அவரின் சகோதரர் ஜானகிராமனுக்கு போன் வந்துள்ளது.

அதில், முத்துகிருஷ்ணன் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஜானகிராமன் கூறுகையில், என் தந்தைக்கு மஞ்சுளாவை அதிகம் பிடிக்கும். அவர் மறுமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என தனது தந்தை விரும்பியதாக கூறியுள்ளார். பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.