உயிரிழந்து 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிரோடு வந்த பெண்!!

589

கடவத்த பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடவத்தை ரன்முத்துகம பகுதியில் வாழும் 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு மீண்டும் உயிருடன் வந்துள்ளார்.

வாகன விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த பெண் அண்மையில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண்ணின் இறுதி நடவடிக்கைள் மேற்கொண்டதன் பின்னர் 7வது நாள் காரியங்கள் செய்த தினத்தன்று மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் இவரது சடலத்தை அடையாளம் காட்டியதன் பின்னரே சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் தவறான சடலம் ஒன்று வீட்டிற்கு கொண்டு வந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.